Friday, September 26, 2008

போதும்டா சாமி அல்லது டேய் நாராயணா - 2

1. அதிர்ச்சியான சம்பவமொன்றில் பறிபோன சுய நினைவு உருட்டுக் கட்டையால் அடித்த உடன் திரும்புவது...

2. கடப்பாறை வயிற்றில் இறங்கி முதுகு வழியாக வெளியே வந்த பிறகும் குத்துபட்ட ஹீரோ உயிர் பிழைத்து வருவது...

3. ஹீரோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட உடன் மக்கள் பக்கத்து மாநிலத்திலிருந்து கூட லாரி லாரியாகத் திரண்டு வருவது...

4. ஹீரோ நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய தோற்றத்துடன் இருந்தாலும் திருமணமாகாதவராகக் காட்டுவது...

5. ஹீரோ சொந்த ஊரிலிருந்து நகரத்துக்கு வரும்போது அங்கே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதும், அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹீரோ முடிவெடுப்பதும்...

6. படம் வெளி மாநிலத்தில் நடந்தாலும் அந்த ஊர்க் கதாபாத்திரங்கள் கூட அட்சர சுத்தமாக தமிழ் பேசுவது (இரண்டொரு வார்த்தைகள் மட்டும் அந்த மாநில மொழியில்)...

7. ஆந்திராவில் நடக்கும் கதையில் தமிழ்க் குடும்பத்துப் பெண் கேரள பாணியில் சேலை கட்டியிருப்பது (எப்படி என்று விரிவாகச் சொன்னால் செருப்பும் துடைப்பமும் என் வீடு தேடி வரும், பரவாயில்லையா?)...

8. தாதா மகா மட்டமானவன் என்று காட்டுவதற்கு கோயில் ஆரத்தியில் சிகரெட் பற்றவைப்பது போல் கட்டுவது...

9. கோயிலில் சாமிக்கு உச்சக்கட்டத்தில் பூஜை நடக்கும்போது ஹீரோவுக்கு வெறி ஏறுவதும், ஹீரோ வில்லனைக் குத்திக் கொன்றதும் பாலபிஷேகம் செய்து அவரது உக்கிரத்தைத் தணிப்பதும்…

10. ஹீரோ கோவப்படும்போது மெட்ராஸ் ஐ வந்த மாதிரி கண் சிவப்பது…


இது அத்தனையும் இந்த ஞாயிறு (22-9-08) மாலை நான் பார்த்த ஒரே சினிமாவில் வந்த கேடு கெட்ட அபத்தங்கள். உக்காந்து பாத்த என்னை எதக் கொண்டு அடிக்கலாம்னு யோசிக்கிறீங்களா? யோசிங்க யோசிங்க… என்னது, படம் பேரு என்னன்னு சொல்லனுமா? அத என் வாயால சொல்ல மாட்டேன். படத்தப் பாத்துட்டு நான் மனசுல என்ன நெனச்சேன்னு வேணும்னா சொல்றேன். ”ஏண்டா யானைக்கு வைக்கிற பேர ஒரு கே*** வைச்சு அத சினிமாவா எடுத்துக் கொடுமைப் படுத்துறீங்க…”

Monday, September 22, 2008

கு(வெ)றுங்கதைகள் ஐந்து

குறுங்கதைகள் ஐந்து என்ற தலைப்பில் ஐந்து குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன். இக்கதைகளை எழுதுவதற்கு லதனாந்த் அங்கிள் அவர்கள் வழ்க்கமாக பயண்படுத்துகிற ஒரு உத்தியை நானும் பயன்படுத்தியுள்ளேன். அங்கிளுக்கு இந்த இடத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கிள் வழக்கமாக கதையின் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைப்பார். அதே உத்தியுடன் நாமும் ஒரு கதை எழுதலாம் என்று தோன்றியது. அங்கிள் எழுதுகிற அதே சிறுகதை வடிவத்தில் எழுதினால் வேறுபாடு இருக்காது என்பதால் இன்னும் சவாலாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று விரும்பினேன். அதனால் தான் இந்தக் குறுங்கதை வடிவம்.

குறுங்கதை என்ற உடன் உங்களுக்ககே புரிந்திருக்கும். ஆம், ஒவ்வொரு கதையும் இரண்டு அல்லது மூண்று பத்திகளுக்குள் முடிந்துவிடும். இவ்வளவு குருகிய கதையின் முடிவில் ஒரு ட்விஸ்ட் வைப்பது உண்மையிலேயே சவாலாக இருந்தது.

கதையைக் குறித்து உங்களது கருத்துக்களை வேர்ட்பிரஸ் தளத்தில் பதிவின் கீழே எழுதவும். நன்றி.

[பதிவைப் படிக்க]

Sunday, September 14, 2008

பார்த்தேன், சிந்தித்தேன் - II

ஊருக்குத் திரும்பும் போது சென்னையில் கண்ட இரு விளம்பரங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. இப்போது முதல் விளம்பரத்தைப் பற்றிப் பார்ப்போம். கோயம்பேட்டிலிருந்து வடபழனி செல்லும் வழியில் ஒரு பிரம்மாண்டமான விளம்பரத் தட்டியில் (ப்ளெக்ஸ் போர்டில்) சில செய்தித்தாள் துண்டுகள் (நியூஸ் பேப்பர் கட்டிங்குகள்) இருந்தன. அவை ஐம்பத்தைந்து வயதில் இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த ஒரு பெண்மணியைப் பற்றிய [மேலும் படிக்க]

வணக்கம் மக்களே

ஏறக்குறைய ஒரு மாதமாகக் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்து, இப்போது திரும்பி வந்திருக்கிறேன். இது வரை பிறந்தநாள் மட்டுமே எனக்கே எனக்கானதாக இருந்தது. வரும் ஆண்டு முதல் இன்னொரு நாளையும் அதனுடன் சேர்த்துக் [மேலும் படிக்க]